இவரை யார் என்று தெரியுமா?
இவர்தான் நமது விரிவுரையாளர் திரு.நாராயணசாமி. 12 பாட மீட்புக்குழு பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் கடந்த 12.12.09ல் பேரணி நடத்தியபோது இவரும் சிறப்புரை வழங்கினார். நான் அவருக்கு நேராக முகமுகமாய் நின்றபோது என்னை அடையாளம் கண்டு கொண்டு பெயர் சொல்லி அழைத்தார். இப்போது மலாயாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுவதாகவும் அறியப்படுகிறது. அவர் நெடுநாள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.
